Monday, 27 May 2013

குரு சரண கானம்




                 குரு சரண கானம்               -தேனுபுரீஸ்வர தாசன்
            (பிரம்ம முராரி - மெட்டு)

குரு பக   வானே  குரு பக   வானே
குறைகள்   களைவாய்  குரு பக   வானே
ஒரு நிகர்    இல்லா   குரு பக   வானே 
வரும்நாள்   வளமாக    வரமருள்   வாயே

வருடத்தில் ஒருவீடு மாறிடும் குருவே
நிமிடத்தில் அருள்வாய் நல்லதோர் வாழ்கை
மாதத்தில் ஒரு முறை மாற்றம் தருவாய்
வாரத்தில் ஒருமுறை வழிபட உன்னை

குருவாரம் அன்று வருவோம் நாங்கள்
ஒருவரம் வேண்டி இருகரம் கூப்பி
மறுவாரம்  வரும்முன் அருள்வாய் நீயே
ஒரு  வரத்துடனே ஒப்பற்ற வாழ்கை

மஞ்சள் வஸ்திரம் சற்றிட உனக்கு
நெஞ்சம் மகிழ்ந்து அருள்வாய் நீயே
பஞ்சுத்  திரிகொண்டு பசுநெய் விளக்கேற்ற
அஞ்சித் திரிந்தோர்க்கு அபயம் அளிப்பாய்

கடலை மாலை கோர்த்தே  சாற்றிட
உடலை வருத்தும் உபாதை குறிப்பாய்
கடலை  போன்ற எம்  துயர்தனை நீயே
சுடலை பொடி போல்   சுட்டெரிப்  பாயே

பக்தியோ டுன்னை  பணிந்திட்ட உடனே
உத்தியோக உயர்வை அளிப்பாய் நீயே
வியாழக் கிழமையில் வலம் வர உன்னை
நியாயமாய் வாழ்வை நிலைக்கச் செய்வாய்

குருபார்வை  கிடைத்திட  கோடி நன்மையே
ஒருபார்வை  பார்ப்பாய் என்னை நீயே
குருபார்க்க வாழ்வில் விடியல் வந்திடும்
குருவே பார்ப்பாய் இரு விழியாலே

குருவாரம் உன்னை வலம் வருவோர்க்கு
குருபலன் கூடி ஒருவரம்  அருள்வாய்
இருமனம்  இணைத்து திருமணம் புரிவாய்
நறுமணம் வாழ்வில் நிலைக்கச் செய்வாய்

குருவே சரணம் குறைகள் களைவாய்
திருவே சரணம் நிறைகள் அருள்வாய்
வருவேன் வலமே வியாழன் தோறும்
                                                தருவாய் நீயே  தைரியம் நாளும் 


visit

www.aanmeegaula.blogspot.in 

www.songsbyshanks.blogspot.in


Please frwd this guru song to all ur contacts.  Let them read this and have GURU ARUL....!



"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Friday, 24 May 2013

காஞ்சி மாமுனிக்கோர் அனுஷ கானம்

காஞ்சி மாமுனிக்கோர் அனுஷ கானம்
(பிரம்ம முராரி  - மெட்டு )

அனுஷத்தில்  பிறந்திட்ட காஞ்சி மாமுனியே
நிமிஷத்தில் அருள்வார் நித்திய இன்பம்
வருஷத்தில் பன்னிரெண்டு அனுஷத்தில் வணங்கிட
கிரக தோஷம் போக்கி சந்தோஷம் அளிப்பார்

ஜெகம்காக்க  வந்திட்ட ஜெகத்குரு  அவரின்
முகம் பார்க்க  மலர்வோம் முன்வினை தீர்ந்து
யுகம் யுகமாக காத்திடும் அவரை
அகம் தனில் நினைத்து  அர்ச்சிப்போமே

ஈசனின் அம்சமாய்  காசிக்கும் நடந்தார்
தேசங்கள் காத்திட நேசமாய் நடந்தார்
பாசமாய் மக்களை பாரினில் வென்றார்
தாசனாய் மாறிட தயை புரிவாரே

நம்பி  கை கூப்பிட    நம்பிக்கை  அளிப்பார்
தும்பிக்கை பலத்தை   தூக்கி கை அளிப்பார்
வெம்பி வாடி வதங்கியே  சென்றோர்
தும்பிபோல்  திளிர்த்து துள்ளியே திரும்புவர்

வேதத்தை  வளர்த்திட பாதத்தால் நடந்தார்
கீதங்கள் பாடிட ஊக்கங்கள் தந்தார்
ஓர்திங்கள்  ஓரிடம் என்றே பறந்தார்
நேர்த்தியாய்  வாழ்ந்திட  நடந்தே காட்டினார்

கருவறை சிவனார் உருக்கொண்டு வந்தார்
தெருவெங்கும் நடந்தார் தெய்வீக சிலையாய்
வருவோர் குறை தீர்த்து வளர்ந்திடச்  செய்தார்
குருவாய் வருவார் இருட்டிலும் துணையாய்

திருக்கோயில் வழிபாடு திருந்திடச் செய்தார்
ஒருகோயில் ஊருக்குள் சிறந்திட செய்தார்
கற்கோயில் பலவற்றை திருப்பணி செய்தார்
நற்கோயில் நாடி நம் மனம் புகுந்தார்

மனதினுள் மஹா ஸ்வாமி  உள்ளார் என்றே
நினைத்தே  நாளும் நடந்திடு வோமே
தினையளவேனும்  அவர் வழி நடக்க
நினைத்திட உயர்வோம் வாழ்வில் தானே

இருட்டை விலக்கும் கை விளக்காக
அருட்குரு  அவரின் பாதையில் செல்வோம்
பொருட் செலவின்றி பொக்கிஷம் பெறுவோம்
அருட்காட்சி கிடைத்து ஆனந்த மடைவோம்
          -தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்


Planning to go to Mahaperiyavaa's adhishtaanam every month alongwith the darshan of atleast 10 puraadhana shiva temples of Thondai Naadu(approx. 180 temples to be covered)

Pls grab this opportunity to see all the shiva temples with GURU's blessings....

For more dtls cont @ 98847 18 324.





Thursday, 16 May 2013

காலடியை தொடர்ந்திடுவோம் காப்பாற்று சங்கரா

(தெளிசிதே மோட்சமு  - மெட்டு)

சந்திர சேகர  சரஸ்வதி  ஸ்வாமியே
சந்திரனை சூடிய சுந்தர ஈஸ்வரா
உன் திரு  உருவையே  உளமாற  நினைத்திட
வந்திடும்  வெற்றியே  வாழ்வினில் என்றுமே

விழுப்புரத்தில்  பிறந்த முழு நிலா முகத்தோனே
கழுபிணி  தீர்த்திடும் காருண்ய ரூபனே
முழு பரம்  பொருளாய்  உனைச்  சரண்  அடைந்திடவே
முழுவதும்  காத்திடுவாய்  முற்பிறப்பும் அறிந்தவனே

முக்தி தலமாம்  காஞ்சியில்   முழு நிலவாய்  அமர்ந்தவா
முக்கண்ணனின் அம்சமாய் முக்தியும் தந்தவா
எக்கணமும் ஈசனை  எண்ணியே  வாழ்ந்தவா
முக்கனியின் சுவையாகும்  உன் நாமம் பெரியவா

வேதத்தை காத்திட வந்திட்ட சங்கரா
பாதத்தை பற்றும் முன் பரிவுடன் காப்பவா
மோகத்தை வென்று  நீ   மோன தவம் புரிந்தவா
யாகத்தை வளர்த்து நீ  ஞாலத்தை  காத்தவா

அரும் தவ  ஞானியே  அனைத்துமே  அறிந்தவா
வரும் துன்பம் அறிந்து நீ  விரட்டிடுவாய்  வேல் விழியால்
கரு மேக   மழையாய்  அருள்  மழையை  பொழிவாய்
கருணை விழிப்பார்வையால்  மன இருளை போக்கிடுவாய்

நேரும் துன்பம் நீக்குவாய்  நேர்த்தியாய் வழி நடத்தி
பேரும் புகழும் பெற்றிடுவோம்  பரமனே உன் பாதம் தொழ
ஊரும் பேரும் கேட்டு நீ  ஊழ்வினைகள் களைவாய்
யாரும் குருவாய் ஏற்றிட எங்கும் காத்து அருள்வாயே

நித்திய அனுஷ்டானம் நிர்மலமாய் செய்தாய்
பத்திய உணவு  உண்டு பாரினை காத்தாய்
சத்திய வாழ்க்கையை  சாதித்துக்  காட்டினாய்
நித்திய மங்களம்  அனைவருக்கும் அளித்தாய்

காஞ்சியின் சங்கரா  காலடி சங்கரா
காலங்கள் கடந்தவா காமகோடி சங்கரா
காலமெல்லாம்  உன்புகழ்  சொல்லிடுவோம் சங்கரா
காலடியை  தொடர்ந்திடுவோம் காப்பாற்று சங்கரா

தித்திக்கும் கல்கண்டை  தந்திடுவாய் கைகளில்
தித்திக்கும் வாழ்கையை சித்திக்கச் செய்வாய்
எத்திக்கும் வேதங்கள்  ஒலித்திட செய்தாய்
சித்திக்கும்  சகலமும் உன் நாமம் சொல்லவே






Sunday, 21 April 2013

கோரிக்கை நிறைவேற்றும் ஓரிக்கை கானம்

கோரிக்கை நிறைவேற்றும் ஓரிக்கை கானம் 
(பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் - மெட்டு )

ஓரிக்கை சென்றிட கோரிக்கை நிறைவேறும்
ஓர்  அபயக்  கையை தரிசிப்போமே
பாரினை வலம் வந்த கார் மேகம் இவரே
ஓரிணை  இல்லா  மஹாஸ்வாமி  அவரே

நம்பி கை கூப்பிட நம் வாழ்க்கை  மலரும்
நம்பிக்கை வளர்ந்து நலம் பெறுவோமே
கும்பிட்ட கையை இறக்கிடும் முன்னே
நம் வினை தீரும் மஹா ஸ்வாமி  அருளால்

கூப்பி கை தொழுதே  அவர் பாதம் பற்றிட
காப்பார் நம்மை காருண்ய  சிவனாய்
வேப்பிலை கசப்பாய் வாழ்வில் தவித்தோர்
வேதனை தீர்த்து அருள்வார்  அவரே

நம்பிக்கை இழந்தோர்  வாழ்வில் தாழ்ந்தோர்
எம்பியே குதித்திட  செய்வார் இவரே
தும்பிக்கையான் போல்  அமர்ந்தே இவரே
அம்பிகை உருவில் காப்பார் இவரே

பலகையில்  அமர்ந்தே பல கை  கூப்பச் செய்வார்
உலகை வ
ம் வந்த உத்தமர் இவரே
வலக்கை அருள்தரும்  இடக்கை  ஆற்றிடும்
உலக்கையாய்  இவர் நிமிர்த்திடுவாரே

சிலர் கை  கூப்பிட  சிலையாய் நிற்பார்
சீட்டிகை  போட்டே சீறிடுவாரே
இலக்கை மீறி  இழிசெயல்  புரிந்தோரை
உலக்கை பார்வையால் வழி மாற்றிடுவார்

கைமாறு கருதாது கைமேல் பலனளிப்பார்
கைகூப்பி வணங்கிட கண் மலர்வாரே
கைங்கர்யம் செய்வோர்க்கு  கருணா  மூர்த்தியே
கைலாய சிவனாய்  காட்சி தருவாரே

இரு கை கூப்பி சரணடைந் திடவே
ஒருகை  கூப்பி வாழ்வளிப்பாரே
மறுகை  அறியாமல் கைமாறு செய்வார்
இருக்கையில் அமர்ந்தே உலகை அறிவார்

-தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர்
Pls see my songs other songs on mahaperiyavaa :


Songs by shanks on periva.proboards :



















"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Thursday, 11 April 2013

ஓரிக்கை நோக்கி கை கூப்புவோம் 09.04.2013

ஓரிக்கை நோக்கி கை கூப்புவோம் 
(சரவணப்  பொய்கையில்  நீராடி - மெட்டு )
ஓரிக்கை  தலம்  வர சீராகுமே - வாழ்வில் 
பேரின்பம் பெற்றே மகிழ்வோமே 
பேரிடர் வாழ்க்கை பொசுங்கிடுமே  - வேரில் 
நீரிட்ட செடியாய் மலர்வோமே 
 
ஓரிக்கை தலத்தின் மஹா ஸ்வாமியே  - நம் 
கோரிக்கை யாவும் நிறைவேற்றுவார் 
பேரிகை  முழங்கிடும் மனதினிலே - ஸ்வாமியின் 
விரி கையை  கண்டதும் விடிந்திடுமே 
 
 
நீரிடை தாமரையாய் அவர் வாழ்ந்தார்  - நம்மை 
பரிசிலாய்  கரை சேர்ப்பார்  வாழ்வினிலே 
விரிசடை சிவனாய்  உலா வந்தார் - அவர் 
பாரிடை பலமுறை நடந்தாரே 
 
விரிகடல் போன்ற நம்  துயர் தீர்க்க - நாளும் 
இவரின் பாதத்தை போற்றிடுவோமே 
பரிதவித்தே  வாழ்வில் துவண்டு போனோர் - இவர் 
சிரிப்பினை கண்டதும் சிலிர்தெழுவார் 
 
சரிவினை வாழ்வில் சந்தித்தோரை - இவர் 
பரிவுடன் ஏணியாய்  ஏற்றிடுவாரே
எரிமலை  போல் வாழ்வில்  துயர் அடைந்தோர்  - இவர் 
தரிசனம் பெற்றிட தழைப்பாரே 
 
ஓரிக்கை தலமே  வந்திடவே - நம் 
தரித்திரம் நீங்கியே தனம் பெறுவோம் 
கோரி  கை  கூப்பிடவே  மஹா  ஸ்வாமி 
ஓரிரு கை  தூக்கியே வாழ்த்திடுவார் 
 
 
காரிருள் வாழ்வில் கலந்குவோர் வாரீர்  - நம் 
ஓரிக்கை தருமே ஒளி வாழ்வே 
நேரிடும் துன்பங்கள்  நீங்கிடுமே  - நாம் 
போரிட்ட வாழ்வே பொன்னாகுமே 
 
 
மாரியாய்  அருள்மழை  பொழிவாரே - நம் 
ஓரிக்கையில் காஞ்சியின்  மஹா ஸ்வாமியே 
சீரிய வாழ்வை சீக்கிரம் அருள்வார் - அவர் 
உயரிய எண்ணங்கள் கொண்டோர்க்கு 
 
நரிபோல் சூதோடு  பரி போல் ஓடி  - நம் 
கரியான வாழ்வை மாற்றிடுவோம் 
சரியான பாதையில்  செல்வோமே - நாம் 
ஓரிக்கை தலத்தை  வணங்கிடவே 
 
-தேனுபுரீஸ்வரதாசன்  இல.சங்கர் 
09.04.2013

Wednesday, 20 March 2013

அன்புருவம் ஆனவரே சாயி 21.03.2013



(அமைதியான நதியினிலே  ஓடும் - மெட்டு)

ன்புருவம் ஆனவரே சாயி என்றும்
தரித்து அருள்பவரே சாயி
ன்முகத்தால் ர்த்து நமக்கு
தவிடுவார் சாயி
ர்தோறும் உறைவார்  ன்றும்
ற்றம் தர சாயி

ஸ்வர்யம் தந்திடுவார்  ஐயங்கள் களைந்திடுவார்
ரு முறையே தொழுதிடவே
ர் குறையும்  வாராதே

ண்ணை நாம் பார்த்தாலே காருண்யம் பொங்கிடுமே
கிரங்கியே போவோம் அவர்
கீர்த்திகளை கேட்டிடவே

கும்பிட்டு தலை சாய்த்து  கூப்பியே கை தொழுதால்
கெட்ட காலம் ஓடிவிடும்
கேட்ட வரம் கிடைத்து விடும்

கை தூக்கி விட்டிடுவார் கை மேல் பலன் அளிப்பார்
கொ
ட்டும் மேளம் கொட்டச் செய்வார்
கோடி நன்மை தந்திடுவார்



"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Friday, 1 March 2013

ஓங்கார ரூபன் கணபதியே

வினைகள் தீர்க்கும் விநாயகன் அருளால் 
சங்கட ஹர  சதுர்த்தி நேரத்தில் இன்று (1.3.13 )எழுதியது :
(ஓம் பூர் புவஸ்சுவஹ  அல்லது 
செந்தமிழ் நாடெனும் போதினிலே மேட்டில் பாடவும்)

ஓமெனும் மந்திர  உட்பொருளே
ஓங்கார ரூபன் கணபதியே
ஓர் முறை வளம் வர  மகிழ்வானே
ஓர் குறை  இன்றி அருள்வானே

ஓர் கொம்பை   கொண்ட கணபதியே
ஓர் முறை    கும்பிட மகிழ்வானே
ஓர் தும்பை  பூவால்  அர்ச்சிக்க
ஓர் துணை   யாய் என்றும்  இருப்பானே

ஒற்றை தும்பிக்கை கணபதியே
பற்றிட  மகிழ்வான்   அவன் பாதம்
நெற்றியில் குட்டியே வழிபடவே
வெற்றியை தருவான் விநாயகனே

குளக்கரை ஓரம் அமர்ந்தவனே
விளங்கிடுவான் நம் துணையாக
கலங்கரை விளக்காய்  கரை சேர்ப்பான்
கலங்கிடும் பக்தரை கணபதியே

ஐந்து கரங்கள் கொண்டவனே
வந்து வரங்களை அருள்வானே
முந்தி அவனை வழிபடவே
முந்தியே அருள்வான் கணபதியே

ஆனை   முகம் கொண்ட  கணபதியே
பானை வயிறு  படைத்தவனே
எண்ணெய்  விளக்கேற்றி வழிபடவே
முன்னை வினைகள் தீர்ப்பானே

முறம் போன்ற    காதை  கொண்டவனே
முறையிட  கேட்பான் குறைகளையே
கரம் குவித்தவனை வழிபடவே
வரம் தந்து    மகிழ்வான்   விநாயகனே

கையில்  மோதகம்  கொண்டவனே
வாழ்க்கையை  இனிக்கச்  செய்வானே
நம்பி கை  கூப்பிட மகிழ்வானே
நம்பிக்கை  வாழ்வில் அருள்வானே

அங்குசம் கையில் கொண்டவனே
சங்கடம் தீர்ப்பான் சதுர்த்தியிலே
பொங்கும் இன்பம் அருள்வானே
தங்கும் செல்வம் தருவானே