Thursday, 14 May 2015
Thursday, 1 January 2015
குறை தீர்க்கும் குரு பக்தி கானம் 01.01.2015
புத்தாண்டின் முதல் பாடல்
குறை தீர்க்கும் குரு பக்தி கானம்
சந்திர சேகர குருவை - தினம்
சிந்தித்தே மனம் மகிழ்வோம்
வந்த துன்பம் விலகும் - மனம்
எந்த நாளும் மகிழும்
குறை தீர்க்கும் குரு பக்தி கானம்
சந்திர சேகர குருவை - தினம்
சிந்தித்தே மனம் மகிழ்வோம்
வந்த துன்பம் விலகும் - மனம்
எந்த நாளும் மகிழும்
மந்த மனமது மாறிட - நாம்
வந்த வினை தனை தீர்த்திட
எந்த நாளும் குருவை - நாம்
சந்ததம் துதித் திடுவோம் (சந்திர சேகர குருவை. . .)
பந்த பாசத்தை போற்றி - நம்
சொந்த பந்தங்கள் கூட்டி
எந்த நாளும் மகிழ்வோம் - நம்
சிந்தையில் சிவம் உணர்வோம் (சந்திர சேகர குருவை. . .)
அந்தி மாலையும் காலையும் - நாம்
முந்தி வணங்கவே சி(முதல்)வனை
வந்த வினைகள் வாடும் - நாம்
நொந்த நினைவுகள் ஓடும் (சந்திர சேகர குருவை. . .)
செந்தணல் யாகம் வளர்த்தே - நாம்
அந்தணர்க் களிப்போம் விருந்தே
சிந்திய கண்ணீர் யாவும் - தினம்
ஆனந்த கண்ணீராய் மாறும் (சந்திர சேகர குருவை. . .)
சந்திர சேகர குருவை - தினம்
சிந்திக்க தித்திக்கும் மனமே
வந்த துன்பம் விலகும் - மனம்
எந்த நாளும் மகிழும்
-தேனுபுரீஸ்வரதாசன் இல.சங்கர். 01.01.2015
Those who copy and paste/fwd , kindly copy the author's name and blog id also...
வந்த வினை தனை தீர்த்திட
எந்த நாளும் குருவை - நாம்
சந்ததம் துதித் திடுவோம் (சந்திர சேகர குருவை. . .)
பந்த பாசத்தை போற்றி - நம்
சொந்த பந்தங்கள் கூட்டி
எந்த நாளும் மகிழ்வோம் - நம்
சிந்தையில் சிவம் உணர்வோம் (சந்திர சேகர குருவை. . .)
அந்தி மாலையும் காலையும் - நாம்
முந்தி வணங்கவே சி(முதல்)வனை
வந்த வினைகள் வாடும் - நாம்
நொந்த நினைவுகள் ஓடும் (சந்திர சேகர குருவை. . .)
செந்தணல் யாகம் வளர்த்தே - நாம்
அந்தணர்க் களிப்போம் விருந்தே
சிந்திய கண்ணீர் யாவும் - தினம்
ஆனந்த கண்ணீராய் மாறும் (சந்திர சேகர குருவை. . .)
சந்திர சேகர குருவை - தினம்
சிந்திக்க தித்திக்கும் மனமே
வந்த துன்பம் விலகும் - மனம்
எந்த நாளும் மகிழும்
-தேனுபுரீஸ்வரதாசன் இல.சங்கர். 01.01.2015
Those who copy and paste/fwd , kindly copy the author's name and blog id also...
Tuesday, 6 May 2014
SHANKARAANANDHAM
எண்ணிரண்டும் ( 8x2=16,
பதினாறும்) அருளும்
ஏகாம்பரசிவ மஹா ஸ்வாமி
கானம்
(ஆண்டவனே உன்
பாதங்களை நான்
கண்ணீரால்
நீராட்டுவேன் - மெட்டு )
காஞ்சியிலே அருள்
காமாட்சி தாசனே - உன்
காருண்ய ரூபம் காண
- எங்கள்
கவலைகள் கரைந்து
கண்ணீராய் வெளியேறிடும்...
மஹா ஸ்வாமி . . .
என் இரண்டு கை
கூப்பி உன் திரு முகம் காண
முன் பிறந்த ஜென்மத்தின்
முன் வினை தீர்ப்பீரே
எண்ணிரண்டும்
அருள்வீரே எந்நாளும் சற்குருவே
இன்னும் ஓர் ஜென்மம் உமை போற்ற அருள்வீரே
உன் இரண்டு கண்
காண உள்ளம் உருகிடுமே
கண் இரண்டும்
காந்தமென மனதை கார்ந்திடுமே
விண்ணை ஆளும் விஸ்வேஸா
மண்ணை ஆள வந்தீரே
என்னை ஈர்த்தாட்கொண்டீர் எங்கள் சிவ
தவநேசா
கண் இரண்டு
போதுமோ உன் திரு உரு காண
காதிரண்டும்
போதுமோ உன்னருள் மொழி கேட்க
பாதம் இரண்டும்
உன் பாதை பற்றியே நடந்திடவே
வேதம் நான்கும்
தந்தவரே பாதை காட்டி அருள்வீரே
-தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர் 29.04.2014
மஹா பெரியவாளின் அருட்கடாட்சத்தினால் 30.12.12 முதல் இன்று வரை இச் சிறியேனுக்கும்
அருள் செய்யும் பொருட்டு என்னை எழுதுகோலாக
பயன்படுத்தி 180க்கும் மேற்பட்ட பாடல்களை எழுத அருள் புரிந்துள்ளார். 2013 டிசம்பரில் மஹாஸ்வாமிகளின் 21ம் ஆண்டு
ஆராதனையின் போது 21 பாடல்களை சங்கரானந்தம் என்னும்
தலைப்பில் மஹாஸ்வாமிகளின் பேரருளால் 6000 பிரதிகள் பதித்து இலவசமாக மஹா
பெரியவாளின் பக்தர்களுக்கு வழங்கி மகிழும் வாய்ப்பினை அளித்தார்.
தற்போது மஹாஸ்வாமிகளின் பிறந்த வருடமாகிய ஜய வருடத்தில் 121வது
ஜெயந்தி நாளான வைகாசி அனுஷத்தில் (ஜூன் 12 ) 121 பாடல்களை புத்தக வடிவில்
வெளியிட்டு அனைவருக்கும் வழங்கி மகிழ மஹாஸ்வாமிகளின் பாதார விந்தங்களை பணிந்து ஆசி
கோருகிறேன். 120 பக்கங்களில் 5000
பிரதிகள் அச்சிட ரூ.1,10,000 தேவைப்படுகிறது.
மஹா பெரியவாளின் பக்தர்களாகிய தாங்களும்
இப்பெரும் புண்ணிய பணியில் ஈடுபட விரும்பினால் குறைந்த பட்சம் தலா ரூ.108
அனுப்பினால் கூட போதும். அனுஷத்தன்று
காஞ்சி மடத்திற்கு வரும் பக்தர்களுக்கு உங்கள் சார்பில் இரண்டு பக்தர்களுக்கு
இப்புத்தகத்தை வழங்கியும் தங்களுக்கு 2
புத்தகங்களை தபாலிலும் சேர்ப்பிக்கிறேன். அதிக அளவில் புத்தகங்களை பெற்று தங்களது
வட்டத்தில் விநியோகிக்க விரும்பும் அன்பர்களும் அலை பேசியில் அணுகவும்.
BANK ACCOUNT DETAILS :
L. SHANKAR
STATE BANK OF INDIA
TAMBARAM BRANCH , CHENNAI 45.
A/C NO. 10565278389
IFSC Code: SBIN0001243
S. THANUJA
INDIAN BANK
RAJAKILPAKKAM CHENNAI - 73.
A/C. NO. 792752550
IFSC Code: IDIB000R053
For those who wish to contribute to SHANKARAANANDHAM book to be released on June12th., 2014
pls contact :
L. SHANKAR 99404 47 437 , 98847 18 324
( 8 to 10 pm. only please)
104 ARAVIND NAGAR , MADAMBAKKAM, CHENNAI - 126.
Those who paid in bank,
Pls send your address (for sending book) to madambakkamshanks@yahoo.com
Monday, 14 April 2014
ஜய ஜய ஜய ஜய ஜய சங்கரா
ஜய ஜய ஜய ஜய ஜய
சங்கரா
ஜகத் குருவே ஸ்ரீ காஞ்சி சங்கரா
ஜெயம் ஜெயம் ஜெயம் தரும் மஹா சுவாமி
ஜெகம் புகழ் ஜெகத் குரு மஹா சுவாமி
ஜய வருடத் திலே மஹா சுவாமி
ஜனனமே கொண் டீரே மஹா சுவாமி
ஜயம் தர உலகிற்கே மஹா சுவாமி
ஜென்மம் ஒன்றெடுத்தீர் மஹா சுவாமி
ஜெய வருடம் கண்டோம் மஹா சுவாமி
ஜன்ம சாபல்யம் பெற்றோம் மஹா சுவாமி
ஜெகத் ரட்சகரே மஹா சுவாமி
ஜெகதீஸ் வரனே மஹா சுவாமி
ஜெகதாம் பிகையாய் மஹா சுவாமி
ஜெகத்தினை காத்திட்டீர் மஹா சுவாமி
ஜெகமுள்ள வரையில் மஹா சுவாமி
ஜெகத் குரு நீரே மஹா சுவாமி
ஜய ஜய ஜய ஜய மஹா
சுவாமி
ஜெயம் அருள்வீரே மஹா சுவாமி
-தேனுபுரீஸ்வர தாசன் இல.சங்கர்.
14.04.2014 10.35pm.
மஹா ஸ்வாமிகள் பிறந்த ஜய வருடத்தில் நாம் வாழ்வது நம் முன்னோர்கள் செய்த
நற்பேறாகும். இவ்வருடம் முழுவதும் மஹா
சுவாமிகளின் அதிஷ்டானத்தை மாதம் ஒரு முறையேனும் சென்று தரிசிப்போம்.
Wednesday, 1 January 2014
அஞ்சனையின் மைந்தனுக்கோர் கானம் - ஹனுமத் ஜெயந்தி 01.01.2014
அஞ்சனையின் மைந்தனுக்கோர் கானம்
ராம ராம ராம ராம ராம
ராம ராம்
ராம ராம ராம ராம ராம
ராம ராம்
ராம ராம ராம ராம ராம
ராம ராம்
ராம ராம ராம ராம ராம
ராம ராம்
அஞ்சனையின் மைந்தனே ஆஞ்சநேயனே
ஆதவனின் சீடனே ஆஞ்சநேயனே
இலங்கையை அழித்தவனே ஆஞ்சநேயனே
ஈசனின் அம்சமே ஆஞ்சநேயனே (ராம ராம )
உன்னத பிறப்பெடுத்தாய் ஆஞ்சநேயனே
ஊக்கமதை தந்திடுவாய் ஆஞ்சநேயனே
என்றும் உன்ன வணங்குவோருக்கு ஆஞ்சநேயனே
ஏற்றங்கள் தந்திடுவாய் ஆஞ்சநேயனே (ராம ராம )
ஐந்துமுகதுடன் அருள்பவனே ஆஞ்சநேயனே
ஒப்பில்லா வீரனே ஆஞ்சநேயனே
ஒதிடுவாய் ராம நாமம் ஆஞ்சநேயனே
ஔடதம் அது தானே ஆஞ்சநேயனே (ராம ராம )
Subscribe to:
Posts (Atom)