Friday 30 August 2013

கிருஷ்ண ஜெயந்தி பாடல் 28.08.2013

கிருஷ்ண ஜெயந்தி  பாடல் by  தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர்.

விட்டல போலோ    விட்டல போலோ    போலோ  விட்டலா
விட்டல போலோ    விட்டல போலோ    போலோ  விட்டலா
விட்டல போலோ    விட்டல போலோ    போலோ  விட்டலா
விட்டல போலோ    விட்டல போலோ    போலோ  விட்டலா

 
ஆலிலை கிருஷ்ணா   நூலிடை சேலை  தந்தாய் நீ அன்று
பால லீலைகள்  புரிந்தாய் நீயே    பால் தயிர்   திருடி தின்று
பாலகிருஷ்ணனாய்   பசுக்களை  காக்க    தூக்கினாய் நீ குன்று
கோல விழியால் கோகுலத்தோரை காத்தாய்  நீ நின்று

உடுப்பியில் நின்றாய்   கையில் மத்தோடு   பால கிருஷ்ணனே
இடுப்பில் கை வைத்து    நின்றாய் நீயே   பண்டரி புரத்தினிலே
மிடுக்காய் நீயே   தேரை ஒட்டினாய்    பஞ்ச பாண்டவர்க்கு
தடுப்பாய்  துயரை   தவறாதுன்னை அஞ்சியே அடைந்வோர்க்கு

குழந்தை வரமே  தந்திட நீயே தொட்ட மல்லூரில்
தவழ்ந்தே வந்தாய் வெண்ணையோடு நவநீத கிருஷ்ணனே
முழம் முழமாக சேலைகள் தந்தாய் முனகிட உன் பெயரை
ஆழம் பார்த்து அருள்வாய் நீயே அனந்த கிருஷ்ணனே

பக்தியோடுன்னை  அணுகிட அருள்வாய் பாலகிருஷ்ணனே
பக்தை  ராதையின்  பக்திக்கு இறங்கிய  ராதா கிருஷ்ணனே
பக்தி மார்க்கத்தை பரப்பிட வந்தாய் பார்த்த சாரதியாய்
பக்தி மார்க்கத்தை வளர்த்திட தந்தாய் பகவத் கீதையையே

பக்தனுக்காக வாசலில் நின்றாய் ஹே பாண்டு ரங்கா
பக்தனுக்கென்றும் அருள்வாய் நீயே ஹரே பாண்டு ரங்கா
பக்தாநுக்ரஹ ப்ரியனே  பிரபோ பாண்டு ரங்கா
பக்தரை என்றும் காத்திடுவாயே  ஹரே  பாண்டு ரங்கா

விட்டல விட்டல பாண்டு ரங்கா   பண்டரி நாதா
விட்டல விட்டல பாண்டு ரங்கா   பண்டரி நாதா
விட்டல விட்டல ரகுமாயி விட்டல பண்டரி புர  வாசா
விட்டல விட்டல ரகுமாயி விட்டல பண்டரி புர  வாசா


பாண்டுரங்கனுக்கோர் பைந்தமிழ் பாடல் by தேனுபுரீஸ்வர தாசன்
(பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - மெட்டு )

பாண்டு  ரங்கா    பாண்டு  ரங்கா
பண்டரிபுரத்தின்  பாண்டுரங்கா
வேண்டும் வரங்களை  தந்திடுவோனே
என்றும் உன்னை மறவோமே 

சந்திர பாகா நதியின் கரையில்
சுந்தரமாக  நின்றவனே
வந்திட உந்தன் சன்னதி உடனே
தந்திடு  வாய் நல் வரங் களையே

புண்ட  லீகனை காண வந்து
காத்திருந்தீரே வாசலிலே
வந்திட்ட அந்தணர் வரம்தரும் விஷ்ணு
என்றறியாமலே நிற்க வைத்தான்

செங்கல்லின் மேல்  நிற்கும் பாண்டுரங்கா
எங்கள் மனக்குறை தீர்ப்பாயே
பங்கஜ விழியால் பார்த்தே நீயே
நீங்கா கவலைகள் மறக்கச்செய்வாய்

வந்து  உன் பாதத்தில்  தலைவைத்து வணங்க
வந்திடும் வாழ்வில் வசந்தங்களே
நொந்து உன் பாதத்தில் விம்மி கதறிட
தந்திடுவாயே சுகங்களையே

இடுப்பில்  கை வைத்து   இன்முகத்  துடனே
மிடுக்காக நிற்கும் மாதவனே
தடுப்பாயே  நீயே நான் படும் துயரை
செவி மடுப்பாய்  எங்கள் கேசவனே 

மகர குண்டலம் அணிந்தே  இந்த
ஜெகம் காக்கும் எங்கள் ஜெகன்னாதா
அகமே குளிர கண்டோம் உன்னை
சுகமே அளிப்பாய் சுந்தரனே

ருக்மணி சமேத பாண்டு ரங்கா
எக்கணமும்  துணை நீர்தானே
சிக்கல்கள் இன்றி சுகமாய் வாழ்ந்திட
சுக்ருதம் அளிப்பீர் வாழ்வினிலே

விட்டல விட்டல என்றே கைகள்
தட்டியே பாடுவோம் உன்முன்னே
விட்டல விட்டல என்றே பாடிட
கிட்டிடும் வாழ்வில்  நிம்மதியே

விட்டல விட்டல பாண்டு   ரங்கா
விட்டல விட்டல பாண்டுரங்கா
விட்டல  விட்டல  பண்டரி  நாதா
மட்டில்லா மகிழ்ச்சியை தருவாயே 



Thursday 22 August 2013

மந்திராலய மகான் ராகவேந்திரரின் 342வது ஜெயந்தி 22.08.2013


மந்திராலய மகான் ராகவேந்திரரின் 342வது ஜெயந்தியான இன்று(22.08.2013)
அவர் அருளால் அடியேனின் சிறு கிறுக்கல்


(ஜெய ஜெகதீஷ் ஹரே  ஆரத்தி பாடல் மெட்டு )

மந்த்ரா  லய வாசா - எங்கள்
யதீந்திர குரு ராயா
வந்திட உன்னிடம் தந்திடு வாயே
வந்திட உன்னிடம் தந்திடு வாயே
முந்தி நீ  வரங்களையே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா


துங்கா   நதி தீர   வாசனே   என்னுள்
நீங்கா திருப்பாயே
தங்கியே நீயே மங்களம் அருள்வாய்
தங்கியே நீயே மங்களம் அருள்வாய்
ஏங்குவோர்க்  கருள்பவனே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா

புவனத்தை  ஆள  புவன கிரியில்
கவனமாய் உதித்தாயே
கவலைகள் தீர்ப்பாய் கண்ணீர் துடைப்பாய்
கவலைகள் தீர்ப்பாய் கண்ணீர் துடைப்பாய்
அவதார நாயகனே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா

கும்ப கோணத்தில் குருவாம் சுதீந்திரர்
நம்பியே உன்னிடமே
தம் வழி   நடக்க   தரணியை  ஆள
தம் வழி   நடக்க   தரணியை  ஆள
அமர்த்தினார் பீடத்திலே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா




சூரியன் போலே  ஓரிடம் நில்லாது
வேறிடம் தினம் சென்றாய்
காரிருள் போக்கினாய் கதிரவ னாய் நீ
காரிருள் போக்கினாய் கதிரவ னாய் நீ
மாரியாய் அருள்புரிந்தாய் - எங்கள்
ராகவேந்திர குரு ராயா

துங்கா நதியின் தீரத்தில் நீயே
தங்கியே தவம் செய்தாய்
பாங்காய் பெற்றாய் ஹனுமன் தரிசனம்
பாங்காய் பெற்றாய் ஹனுமன் தரிசனம்
நீங்கா தமர்ந்தாயே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா

பஞ்ச  முகியில்  பஞ்சமுக  தரிசனம்
பெற்றாய் நீ ஐயா
அஞ்சியே வருவோர்க்கு அபயம் அளிப்பாய்
அஞ்சியே வருவோர்க்கு அபயம் அளிப்பாய்
செஞ்சுடர் மேனியனே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா

பிரஹலாத பிறப்பில் ஹோமம் செய்த
குண்டத்தில் அமர்ந்தாய்
கிரஹதோஷம்  போக்கி சந்தோஷம் அளிப்பாய்
கிரஹதோஷம்  போக்கி சந்தோஷம் அளிப்பாய்
பிரஹலாத உருவில் நீ  - எங்கள்
ராகவேந்திர குரு ராயா

மதிமுகம்  கொண்ட மங்கள ரூபா
கதிநீயே  எங்களுக்கு
வருந்தியே வருவோர்  விதிதனை மாற்றி
வருந்தியே வருவோர்  விதிதனை மாற்றி
விருந்தாய் அருள்புரிவாய் - எங்கள்
ராகவேந்திர குரு ராயா
-தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர் 22.08.13
 
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."


Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God




Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

Thursday 1 August 2013

ஆடி கானம்



ஆடி 16ம்  நாள்  கானம்  01.08.2013
(
பிரம்ம முராரி - மெட்டு )
-
தேனுபுரீஸ்வர தாசன் இல சங்கர்.

திருவேற் காட்டின்  கருமாரி அம்மா
வருவோர் குறைகள் நீ  பெறுவாய் அம்மா
கருமுதல்    காக்கும் கருமாரி தாயே
ஒரு நிகர்    இல்லா ஒப்பற்ற தாயே

மாங்காட்டில்  தவம் செய்த    மான் விழி   தாயே
நீங்காத இன்பம் நித்தியம் அருள்வாய்
ஏங்குவோர் குறை தீர்த்து   ஏக்கங்கள்  போக்கி
தேங்கிய துயரை நீங்கிடச் செய்வாய்

மாம்பலம் தலத்தின் முப்பாத் தம்மா
ஆம்பல் கண்களால் அருளை  பொழிவாய்
சோம்பல் நீக்கி சுகங்கள்  தருவாய்
வரம் பல   பெறுவர் வணங்குவோர் உன்னை

மயிலை தலத்தில் மயிலாக வந்த
கயிலை நாயகி கற்பக  வல்லியே
ஒயிலாக நிற்கும் ஒப்பற்ற தேவி
குயிலாக பாடிட   குறைகள் தீர்ப்பாய்

கோல விழியால் ஜாலங்கள் காட்டும்
ஞாலம் போற்றும் கோலவிழி அம்மா
கோலம் போட்டு   ஓர் விளக்  கேற்றிட
காலந்  தோறும்  காப்பாய்  நீயே

முண்டகக்  கன்னியே முப்பெருந்  தேவியாய்
அண்டியோர்க்  கருள்வாய்  அனைத்தும் நீயே
வேண்டியே உன்னை   வலம் வந்து   வணங்கிட
வேண்டிய  தருள்வாய் விரைவில்  நீயே

பச்சை அம்மனாய் ஒளிரும் தாயே
இச்சைகள் தீர்த்து ஈர்ப்பாய் நீயே
பச்சிலை போல   மனம் கொண்ட   தாயே
இச்செகத்   தில்வாழ   இனிதாய்  அருள்வாய்

சென்னையின் அன்னையே  காளிகாம் பா தாயே
உன்னை வேண்டிட உயர்வோம் வாழ்வில்
மன்னாதி மன்னரும் மண்டியிட் டுன்னை
அண்டிட அருள்வாய் அபயம் நீயே

திருவொற்றி  யூரின் வடிவுடை யம்மா
ஒரு வெற்றி அருள்வாய் வாழ்வில் அம்மா
பிறை நெற்றி பணிந்து  குறைகளை கூறிட
நிறைவேற்றி வைப்பாய் கோரிக்கை யாவும்

மேலூர் தலத்தின் திருவுடை யம்மனே
பாலூறும் தாய்மையோடருளும் தாயே
காலையில் உன்னை தரிசிக்க  தாயே
மாலைக்குள் அருள்வாய் மங்களம் யாவும்

திருமுல்லை வாயிலில் ஒரு மாலை வேளையில்
ஒரு முல்லை கொடியிடை உன்னைக் காண
ஒரு முல்லைப் பூவாய்  சிரித்தே  நீயே
வரும் தொல்லை   தீர்த்து   வரம் அருள்  வாயே

அம்பத்தூர் தலத்தில் அம்பிகை வைஷ்ணவி
நம்பி வந்தோர்க்கு நல்லருள் புரிவாள்
கும்பிட்ட கையை இறக்கிடும் முன்னே
அம்பிகை அருள்வாள் வேண்டிய தனை த்தும்

பெரம்பூர் தளத்தில் கோமதி  தாயே
வரம் பல அருளிட வந்தமர்ந்தாளே
சிரம் தாழ்த்தி வழிபட சீராய் அருள்வாள்
கரம் கூப்பி தொழுதிட  கண்ணீர் துடைப்பாள்

கங்கை அம்மனாய் எங்கும் அருள்வாள்
பொன்னி யம்மனாய் கன்னியர்க் கருள்வாள்
செல்லி யம்மனாய் பல்லுயிர் காப்பாள்
திரௌபதி  அம்மனாய் சௌக்கியம் அளிப்பாள்

ரேனுகாம் பாளாய்  வேணும்வரம்   தருவாள்
தண்டு மாரியாய்  வேண்டிய தருள்வாள்
முத்து மாரியாய்  பக்தருக் கருள்வாள்
நாகாத்  தம்மனாய்  நலம் பல   புரிவாள்

ஆடி 17ம்  நாள்  கானம்  02.08.2013
(தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி - மெட்டு)

தாயே காமாக்ஷி  - உன்னை
தேடியே வந்தேனே
தயை நீ புரிவாயே - எந்தன்
மாயைகள் நீக்கி நீயே

திங்கள் முகம் கொண்டவளே
பொங்கும் உந்தன் புன்சிரிப்பால்
மங்கும் எந்தன் வாழ்வில் நீ
பொங்கும் இன்பம் தந்திடுவாய்

சங்கரனின் நாயகியே
சிங்கார காமாக்ஷி
எங்கும் உந்தன் பேரருளே
தங்கிடவே அருள்புரிவாய்

அங்கையற்கண்ணி தாயே - உன்
பங்கஜ நேத்ரம் திறப்பாயே
செங்கைகள் காட்டி அருள்புரிந்து
எங்களின் குறை தீர்ப்பாயே

ஆடிப் பூர நாயகியே - உன்னை
தேடி வந்தோம் பூரத்திலே
வாடிப் போன  முகம் கண்டு - நீ
ஓடி வந்து அருள்புரிவாய்

கூடி பாடி மகிழ்ந்திடுவோம்
ஆடி பூர நன்னாளில்
நாடி வந்த நல்வரத்தை
தேடி வந்து தருவாயே

கோடி சந்திர முகம் கொண்டு
காமகோடியில் உறைபவளே
நொடிந்து வீழ்ந்தேன் உன் நிழலில்
நொடியில் எனை காப்பாயே