மந்திராலய மகான்
ராகவேந்திரரின் 342வது ஜெயந்தியன்று(22.08.2013)
அவர் அருளால் அடியேனின் சிறு
கிறுக்கல்
(ஜெய ஜெகதீஷ் ஹரே ஆரத்தி பாடல் மெட்டு )
மந்த்ரா லய வாசா - எங்கள்
யதீந்திர குரு ராயா
வந்திட உன்னிடம் தந்திடு வாயே
வந்திட உன்னிடம் தந்திடு வாயே
முந்தி நீ வரங்களையே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா
துங்கா நதி தீர
வாசனே என்னுள்
நீங்கா திருப்பாயே
தங்கியே நீயே மங்களம் அருள்வாய்
தங்கியே நீயே மங்களம் அருள்வாய்
ஏங்குவோர்க் கருள்பவனே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா
புவனத்தை ஆள புவன கிரியில்
கவனமாய் உதித்தாயே
கவலைகள் தீர்ப்பாய் கண்ணீர் துடைப்பாய்
கவலைகள் தீர்ப்பாய் கண்ணீர் துடைப்பாய்
அவதார நாயகனே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா
கும்ப கோணத்தில் குருவாம் சுதீந்திரர்
நம்பியே உன்னிடமே
தம் வழி நடக்க தரணியை
ஆள
தம் வழி நடக்க தரணியை
ஆள
அமர்த்தினார் பீடத்திலே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா
சூரியன் போலே ஓரிடம் நில்லாது
வேறிடம் தினம் சென்றாய்
காரிருள் போக்கினாய் கதிரவ னாய் நீ
காரிருள் போக்கினாய் கதிரவ னாய் நீ
மாரியாய் அருள்புரிந்தாய் - எங்கள்
ராகவேந்திர குரு ராயா
துங்கா நதியின் தீரத்தில் நீயே
தங்கியே தவம் செய்தாய்
பாங்காய் பெற்றாய் ஹனுமன் தரிசனம்
பாங்காய் பெற்றாய் ஹனுமன் தரிசனம்
நீங்கா தமர்ந்தாயே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா
பஞ்ச முகியில் பஞ்சமுக
தரிசனம்
பெற்றாய் நீ ஐயா
அஞ்சியே வருவோர்க்கு அபயம் அளிப்பாய்
அஞ்சியே வருவோர்க்கு அபயம் அளிப்பாய்
செஞ்சுடர் மேனியனே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா
பிரஹலாத பிறப்பில் ஹோமம் செய்த
குண்டத்தில் நீ அமர்ந்தாய்
கிரஹதோஷம் போக்கி சந்தோஷம் அளிப்பாய்
கிரஹதோஷம் போக்கி சந்தோஷம் அளிப்பாய்
பிரஹலாத உருவில் நீ - எங்கள்
ராகவேந்திர குரு ராயா
மதிமுகம் கொண்ட மங்கள ரூபா
கதி நீயே எங்களுக்கு
வருந்தியே வருவோர் விதிதனை மாற்றி
வருந்தியே வருவோர் விதிதனை மாற்றி
விருந்தாய் அருள்புரிவாய் - எங்கள்
ராகவேந்திர குரு ராயா
-தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர் 22.08.13
(சித்தாலப்பாக்கம் ராகவேந்திரர் திருக்கோவிலில் அமர்ந்து எழுதியது)