மஹா ஸ்வாமியின் அருளால்
மஹா ஸ்வாமிக்கு அடியேனின் 108வது பாடல்.
ஆயிரம் பாமாலை
பாடிடுவோம் - உம்மை
தாயினும் மேலான
மஹா ஸ்வாமி
ஆயிரம் பூக்களால்
அர்ச்சிப்போமே - உம்மை
வயிரமாய்
ஜொலிக்கும் மஹா ஸ்வாமி
தாயாய் உந்தன்
தயவை நாடி
சேயாய் நாங்கள்
தேடி வந்தோம்
காயாய் உள்ள
வாழ்கையை நீர்
கனியாய் மாற்றியே
அருள்வீரே
ஓயாத துன்பங்கள்
வாழ்வினிலே - என்றும்
ஓயாமல் காப்பீர்
மஹா ஸ்வாமி
தீயாக வினைகள்
தீண்டிடுதே - என்றும்
ஜோதியாக ஜொலிக்க
அருள்புரிவீர்
மாயா மலங்கள்
மாய்ந்து போக
ஓயா துன்பங்கள்
ஓய்ந்து போக
தீயவை என்றும்
தீண்டிடாது
தூயவனே நீர்
காத்தருள்வீர்
புயலாய் வாழ்வில்
சீற்றங்களே - எங்கும்
பேயாய் அலைந்தோம்
பாரினிலே
நிழலாய் நீர்
என்றும் வந்திடுவீர் - நாங்கள்
எழிலாய் ஏற்றம்
பெற அருள்வீர்
வெய்யிலில் வாடியே வதங்கிடும்
பயிராய் நாங்கள்
பரிதவித்தோம்
ஓய்வின்றி
வாழ்வினில் உழன்றோமே - என்றும்
தொய்வின்றி
துளிர்த்தெழ அருள்வீரே
தேய்வின்றி
வாழ்வினில் வளர்ந்திடவே - என்றும்
ஓய்வின்றி
அருள்வீர் மஹா ஸ்வாமி
மெய் வாய் கண் புலன்களால்
செய்திட்ட பழி
பாவச் செயல்களை
தூய்மை செய்ய
தூயவரே
உய்யும் வழி
உரைப்பீர் மஹா ஸ்வாமி
-தேனுபுரீஸ்வரதாசன்
இல.சங்கர்.
No comments:
Post a Comment