Tuesday 12 November 2013

தாயினும் மேலான மஹா ஸ்வாமி 09.11.2013




மஹா ஸ்வாமியின்  அருளால் 
மஹா ஸ்வாமிக்கு  அடியேனின் 108வது பாடல்.

ஆயிரம் பாமாலை பாடிடுவோம் - உம்மை
தாயினும் மேலான மஹா ஸ்வாமி
ஆயிரம் பூக்களால் அர்ச்சிப்போமே - உம்மை
வயிரமாய் ஜொலிக்கும் மஹா ஸ்வாமி
தாயாய் உந்தன் தயவை நாடி
சேயாய் நாங்கள் தேடி வந்தோம்
காயாய் உள்ள வாழ்கையை நீர்
கனியாய் மாற்றியே அருள்வீரே

ஓயாத துன்பங்கள் வாழ்வினிலே - என்றும்
ஓயாமல் காப்பீர் மஹா ஸ்வாமி
தீயாக வினைகள் தீண்டிடுதே - என்றும்
ஜோதியாக ஜொலிக்க அருள்புரிவீர்
மாயா மலங்கள் மாய்ந்து போக
ஓயா துன்பங்கள் ஓய்ந்து போக
தீயவை என்றும் தீண்டிடாது
தூயவனே நீர் காத்தருள்வீர்

புயலாய் வாழ்வில் சீற்றங்களே - எங்கும்
பேயாய் அலைந்தோம் பாரினிலே
நிழலாய் நீர் என்றும் வந்திடுவீர் - நாங்கள்
எழிலாய் ஏற்றம் பெற அருள்வீர்
வெய்யிலில்  வாடியே வதங்கிடும்
பயிராய் நாங்கள் பரிதவித்தோம்

ஓய்வின்றி வாழ்வினில் உழன்றோமே - என்றும்
தொய்வின்றி துளிர்த்தெழ அருள்வீரே
தேய்வின்றி வாழ்வினில் வளர்ந்திடவே - என்றும்
ஓய்வின்றி அருள்வீர் மஹா ஸ்வாமி
மெய் வாய்  கண் புலன்களால்
செய்திட்ட பழி பாவச் செயல்களை
தூய்மை செய்ய தூயவரே
உய்யும் வழி உரைப்பீர் மஹா ஸ்வாமி

-தேனுபுரீஸ்வரதாசன் இல.சங்கர்.

No comments:

Post a Comment