Tuesday 23 August 2016

சின்னி கிருஷ்ண கானம் 08.08.2012



  1. வெண்ணெய் உனக்கு எடுத்து வைத்தோம் வா வா கிருஷ்ணா
    கண்ணை உருட்டி நீயும் அதை உண்பாய் கிருஷ்ணா
    மண்ணை தின்று உலகை காட்டும் பால கிருஷ்ணா
    என்னையும் ஆட்கொள்வாயே கிருஷ்ணா கிருஷ்ணா

    கோகுலத்தில்  யாதவர்கள் நனைந்திட கிருஷ்ணா
    கோவர்த்தன மலைதாங்கி  காத்தாய் கிருஷ்ணா
    கோகுலத்தில் பசுக்கள் கூட ஆடின கிருஷ்ணா
    கோமகனாம் உன் புகழை பாடின கிருஷ்ணா

    திருடுவதுன் தொழில் தானே கிருஷ்ணா கிருஷ்ணா
    தயிரை அன்று   திருடித் தின்றாய்  கிருஷ்ணா  கிருஷ்ணா
    தளிர் பெண்களின்   மாற்றுடையை திருடிய கிருஷ்ணா
    எனதுள்ளத்தையும் திருடிவிட்டாய் கிருஷ்ணா கிருஷ்ணா

    மதுராவில் மலர்ந்திட்ட  மண்ணுன்னி கிருஷ்ணா
    உடுப்பியில் மத்தோடு நின்றாய் கிருஷ்ணா
    மல்லூரில் தவழ்ந்திடும் நவநீத கிருஷ்ணா
    எங்கள் உள்ளத்திலும் குடிகொள்வாய் கிருஷ்ணா

    மண்ணை அள்ளித் தின்றாயே பால கிருஷ்ணா
    பெண்ணை அன்று காத்தாயே ராதா கிருஷ்ணா
    தன்னை மறந்து    சரண் அடைந்தால்  காக்கும் கிருஷ்ணா
    என்னை மறந்து குழந்தையானேன் காப்பாய்  கிருஷ்ணா

    துவாரகையில் ஆண்டாயே  ராஜா  கிருஷ்ணா
    குருவாயூர்  வந்தாயே  உன்னி  கிருஷ்ணா
    பாண்டவர்க்கு  அருள்புரிந்தாயே    பால கிருஷ்ணா
    வேண்டுவோர்க்கு  அருள்புரிவாய்  கிருஷ்ணா கிருஷ்ணா

    சீடைமுறுக்கு செய்து வைத்தோம் சின்னி கிருஷ்ணா
    நடைபயின்று  நளினமாய் நீ வாராய் கிருஷ்ணா
    பீடை பிணிகள் பயந்தோட  பாராய் கிருஷ்ணா
    ஓடை நீராய் வாழ்க்கையோட  அருள்வாய் கிருஷ்ணா




-தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர்

No comments:

Post a Comment