ஓரிக்கை நோக்கி கை கூப்புவோம்
(சரவணப் பொய்கையில் நீராடி - மெட்டு )
ஓரிக்கை தலம் வர சீராகுமே - வாழ்வில்
பேரின்பம் பெற்றே மகிழ்வோமே
பேரிடர் வாழ்க்கை பொசுங்கிடுமே - வேரில்
நீரிட்ட செடியாய் மலர்வோமே
ஓரிக்கை தலத்தின் மஹா ஸ்வாமியே - நம்
கோரிக்கை யாவும் நிறைவேற்றுவார்
பேரிகை முழங்கிடும் மனதினிலே - ஸ்வாமியின்
விரி கையை கண்டதும் விடிந்திடுமே
நீரிடை தாமரையாய் அவர் வாழ்ந்தார் - நம்மை
பரிசிலாய் கரை சேர்ப்பார் வாழ்வினிலே
விரிசடை சிவனாய் உலா வந்தார் - அவர்
பாரிடை பலமுறை நடந்தாரே
விரிகடல் போன்ற நம் துயர் தீர்க்க - நாளும்
இவரின் பாதத்தை போற்றிடுவோமே
பரிதவித்தே வாழ்வில் துவண்டு போனோர் - இவர்
சிரிப்பினை கண்டதும் சிலிர்தெழுவார்
சரிவினை வாழ்வில் சந்தித்தோரை - இவர்
பரிவுடன் ஏணியாய் ஏற்றிடுவாரே
எரிமலை போல் வாழ்வில் துயர் அடைந்தோர் - இவர்
தரிசனம் பெற்றிட தழைப்பாரே
ஓரிக்கை தலமே வந்திடவே - நம்
தரித்திரம் நீங்கியே தனம் பெறுவோம்
கோரி கை கூப்பிடவே மஹா ஸ்வாமி
ஓரிரு கை தூக்கியே வாழ்த்திடுவார்
காரிருள் வாழ்வில் கலந்குவோர் வாரீர் - நம்
ஓரிக்கை தருமே ஒளி வாழ்வே
நேரிடும் துன்பங்கள் நீங்கிடுமே - நாம்
போரிட்ட வாழ்வே பொன்னாகுமே
மாரியாய் அருள்மழை பொழிவாரே - நம்
ஓரிக்கையில் காஞ்சியின் மஹா ஸ்வாமியே
சீரிய வாழ்வை சீக்கிரம் அருள்வார் - அவர்
உயரிய எண்ணங்கள் கொண்டோர்க்கு
நரிபோல் சூதோடு பரி போல் ஓடி - நம்
கரியான வாழ்வை மாற்றிடுவோம்
சரியான பாதையில் செல்வோமே - நாம்
ஓரிக்கை தலத்தை வணங்கிடவே
-தேனுபுரீஸ்வரதாசன் இல.சங்கர்
09.04.2013
No comments:
Post a Comment