Tuesday 29 January 2013

மூன்று தேவியர் பாடல் - தேனுபுரீஸ்வர தாசன் இல.சங்கர்

Wrote the following song on 25th Jan. during journey to Horanaadu (from Kolloor)

மூன்று தேவியர் பாடல் - தேனுபுரீஸ்வர தாசன்  இல.சங்கர்
(நீலக்கடலின்  ஓரத்தில் - மெட்டு )

கொல்லூர் மூகாம்பிகை 

மூ  காம்பிகையே  சரணம் அம்மா
மூன்றாம்  பிறை நெற்றி கொண்டவளே
மூன்று தேவியாய்  அருள்பவளே
மூகாசுரனை வதைத்தவளே

குடஜாத்ரி  மலையின்  குமாரியே
படபடக்கும் விழி கொண்டவளே
தடதடவெனவே   ஓடி வந்தேன்
கடந்திட அருள்வாய்  கவலைகளை

சொற்களால் உன்னை பாடிடவே
நற்கதி அருளும் தேவியளே
பற்பல நாமம் சொல்லிடவே
நற்பலன் அருள்வாய் நாளுமே

வானுயர  மரக்  காட்டினிலே
நான் உயர உன்னை நாடி வந்தேன்
செல்வம்  தான் உயர  செய்வாயே
பல உயரம் தொட வைப்பாயே

சங்கு சக்ர தாரினியே
லிங்க ரூபம் கொண்டவளே
தங்க ரேகை ஜோலி ஜொலிக்க
பொங்கும் இன்பம் தருபவளே

மழலை செல்வம் அருள்பவளே
குழந்தைக்கு குரலை அருள்பவளே
பழ வினை போக்கி அருள்பவளே
உனை தொழ வினை தீர்த்திடும் மூகாம்பா



சிருங்கேரி சாரதாம்பா

சிருங்கேரியில் உறை சாரதாம்பா
சங்கரர் போற்றிட்ட  சாரதாம்பா
சங்கடம் யாவும்  தீர்ப்பவளே
மங்களம்  வாழ்வில் அருள்வாயே

துங்கா நதி தீர வாசினியே
தங்கும் செல்வம் அருள்பவளே
சிருங்கார ரூப சுந்தரியே
வருங்காலம் வளமாய்  ஆக்குவாயே

சஞ்சல முகத்துடன் வந்தோமே
தஞ்சம் என்றே  சரண் புகுந்தோம்
மஞ்சள் மாலை வெய்யில் போல
நெஞ்சம் மகிழச் செய்வாயே

சாரதா பீடம் சமைதவளே
காரணமாய் வந்து அமர்ந்தவளே
பாரத்தை  இறக்கி வைத்தோமே
ஆரத்தி ஏற்று அருள்வாயே

உன் திரு முகத்தை கண்டதுமே
என் இரு கண்கள் குளமானதே
பண்  திரு பாடல் நானறியேன்
இன்னருள் புரிந்தெனை ஏற்பாயே

வெள்ளிக்  கிழமை மாலையிலே
வெள்ளி நிலவாய் ஜொலிப்பவளே
துள்ளியே குதித்தோம் உனைக்  கண்டு
அள்ளியே அருள்வாய்  ஆசிகளை

பௌர்ணமி நிலவாய் உனை கண்டு
மௌனமாய் நின்றோம்  மதி மயங்கி
மௌனமாய் அருளும் மாதபசி
சௌக்கியம் யாவும் தருபவளே



ஹொரநாடு  அன்னபூரணி

அன்ன  பூரணி  அருள்வாயே
வண்ண வண்ணமாய் வாழ்வினிலே
எண்ணங்கள் யாவும் சீர்பெறவே
உன்னிடம் ஓடியே வந்தோமே

தங்கப் பதுமையாய் நின்றவளே
பொங்கும் இன்பம் தருபவளே
பொங்கும் உந்தன் பேரருளே
எங்கும் அன்னமாய்  பொங்கிடுமே

ஹொரநாடு  என்னும் தலத்தினிலே
மரங்கள் அடர்ந்த காட்டினிலே
வரங்கள் அருள வந்தவளே
கரம் குவித்துன்னை  தொழுவோமே

இரு கரம் கூப்பி தொழுதிடவே
ஒரு வரம் தருவாய் மகிழ்ந்தே நீ
வருவோர்  வயிறார  பசியாறி
பெறுவார் இன்பம் எந்நாளும்

முற்றிய பக்தியால் உனைப்பாட
பெற்றிடுவோம் பல நன்மைகளே
நற்றமிழால் உனை  நான் பாட
சொற்களை தருவாய் பூரணியே

பெற்றிட உந்தன் தரிசனமே
வற்றி டாதசெல்வம்  வந்திடுமே
உற்ற துணையாய் நீ இருப்பாய்
பெற்ற பிறவியின் பயன் பெறுவோம்

பூஞ்சிட்டு குருவிகள் ஸ்ருதி பாட
குறிஞ்சி பூவாய் மலர்ந்தவளே
செஞ்சுடர்  சொர்ண  தேவியளே
நெஞ்சம் மகிழ்ந்தே அருள்பவளே

எங்கும் உந்தன் திரு நாமம்
ஓங்கி  ஒலிக்கும் ஹொரநாடு
மங்களம் யாவும் அருள்பவளே
வணங்கியே மகிழ்வோம் நாங்களே

கற்றை மரங்கள் சாமரமே
ஒற்றை அருவியின்  ராகங்களும்
சிற்றாறுகளின் சங்கீதம்
பெற்றே மகிழ்ந்திடும்  தேவியே

மூலிகை காற்றின்  வாசங்களே
போலியை நீக்கும் மனதினிலே
சங்கொலியாய் மனம் பக்தியிலே
வலிமை பெற்றே மகிழ்ந்திடுமே

"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment