Wednesday 30 January 2013

தங்கத் தாமரை முகமே ஓம் சாயி - தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.



தங்கத்  தாமரை முகமே  ஓம் சாயி
செங்காந்தள்  உன் நிறமே  ஸ்ரீ சாயி
செங்கதிர்  சூரியன் போலே
எங்கும் மங்களம் தருவாயே

தாமரை கண்கள் அதை நீ கொஞ்சம் திறந்தால்
கவலைகள் திவலைகலாகி  பறந்தோடி விடுமே
முத்துப் பற்கள்  தெரிய நீ கொஞ்சம் சிரித்தால்
பத்துப் பதிடைந்து ஜென்மங்கள்  சுகமே
பாபா உன் பார்வையால் என் பாவங்கள் தீர்ப்பாயே

துவாரகா மாயி  வந்து துணி அதனை பார்க்க
ஆறாத மனக் காயம்  காணாது போகுமே
சாவடி சென்று உந்தன் சேவடியில் தலை சாய்த்தால்
போராடி  வாழும் வாழ்க்கை  காற்றாடி ஆகுமே
பாபா உன் பார்வையால் என் பாவங்கள் தீர்ப்பாயே

வேப்ப  மரத்தடி  நீ அமர்ந்து வேதனைகள்  தீர்ப்பாய்
காப்பாய்  என்னை வாழ்வில் நான் சாதனைகள் செய்ய
வேம்பின்  குணம் போல் உன் பார்வை அது ராகங்கள் தீர்க்குமே
அன்பின் மிகுதியால் உன் பேர் சொல்ல சோகங்கள் தீர்ப்பாய்
பாபா உன் பார்வையால் என் பாவங்கள் தீர்ப்பாயே



"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment