Thursday 22 August 2013

மந்திராலய மகான் ராகவேந்திரரின் 342வது ஜெயந்தி 22.08.2013


மந்திராலய மகான் ராகவேந்திரரின் 342வது ஜெயந்தியான இன்று(22.08.2013)
அவர் அருளால் அடியேனின் சிறு கிறுக்கல்


(ஜெய ஜெகதீஷ் ஹரே  ஆரத்தி பாடல் மெட்டு )

மந்த்ரா  லய வாசா - எங்கள்
யதீந்திர குரு ராயா
வந்திட உன்னிடம் தந்திடு வாயே
வந்திட உன்னிடம் தந்திடு வாயே
முந்தி நீ  வரங்களையே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா


துங்கா   நதி தீர   வாசனே   என்னுள்
நீங்கா திருப்பாயே
தங்கியே நீயே மங்களம் அருள்வாய்
தங்கியே நீயே மங்களம் அருள்வாய்
ஏங்குவோர்க்  கருள்பவனே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா

புவனத்தை  ஆள  புவன கிரியில்
கவனமாய் உதித்தாயே
கவலைகள் தீர்ப்பாய் கண்ணீர் துடைப்பாய்
கவலைகள் தீர்ப்பாய் கண்ணீர் துடைப்பாய்
அவதார நாயகனே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா

கும்ப கோணத்தில் குருவாம் சுதீந்திரர்
நம்பியே உன்னிடமே
தம் வழி   நடக்க   தரணியை  ஆள
தம் வழி   நடக்க   தரணியை  ஆள
அமர்த்தினார் பீடத்திலே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா




சூரியன் போலே  ஓரிடம் நில்லாது
வேறிடம் தினம் சென்றாய்
காரிருள் போக்கினாய் கதிரவ னாய் நீ
காரிருள் போக்கினாய் கதிரவ னாய் நீ
மாரியாய் அருள்புரிந்தாய் - எங்கள்
ராகவேந்திர குரு ராயா

துங்கா நதியின் தீரத்தில் நீயே
தங்கியே தவம் செய்தாய்
பாங்காய் பெற்றாய் ஹனுமன் தரிசனம்
பாங்காய் பெற்றாய் ஹனுமன் தரிசனம்
நீங்கா தமர்ந்தாயே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா

பஞ்ச  முகியில்  பஞ்சமுக  தரிசனம்
பெற்றாய் நீ ஐயா
அஞ்சியே வருவோர்க்கு அபயம் அளிப்பாய்
அஞ்சியே வருவோர்க்கு அபயம் அளிப்பாய்
செஞ்சுடர் மேனியனே - எங்கள்
ராகவேந்திர குரு ராயா

பிரஹலாத பிறப்பில் ஹோமம் செய்த
குண்டத்தில் அமர்ந்தாய்
கிரஹதோஷம்  போக்கி சந்தோஷம் அளிப்பாய்
கிரஹதோஷம்  போக்கி சந்தோஷம் அளிப்பாய்
பிரஹலாத உருவில் நீ  - எங்கள்
ராகவேந்திர குரு ராயா

மதிமுகம்  கொண்ட மங்கள ரூபா
கதிநீயே  எங்களுக்கு
வருந்தியே வருவோர்  விதிதனை மாற்றி
வருந்தியே வருவோர்  விதிதனை மாற்றி
விருந்தாய் அருள்புரிவாய் - எங்கள்
ராகவேந்திர குரு ராயா
-தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர் 22.08.13
 
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."


Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God




Do all the good you can.
By all the means you can.
In all the ways you can.
In all the places you can.
At all the times you can.
To all the people you can.
As long as ever you can
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment