(நாதர் முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே )
காலடி பணிந்தோம் காப்பீரே
காஞ்சி மாநகரமது உள்ளவரையில் -உந்தன்
காமகோடி பீடம் அது அருள் சுரக்கும்
நெற்றியின் வெண்ணீரை கண்டதுமே - அது
வெற்றியை தந்திடுமே வாழ்வினிலே
பற்றிட உந்தன் பொற்பாதம் அது
பெற்றுத் தந்திடுமே நற்கதியே
அபயத் திருகரத்தினை கண்டதுமே - வாழ்வில்
ஜெயம் வந்து சேர்ந்திடுமே ஜகத் குருவே
சகாயம் நீர் புரிந்திடுவீர் சற்குருவே - என் அபயக் குரல் கேட்டு அருள் புரிவீர்
பழி பாவச் செயல்கள் நான் பல புரிந்தேன் - உன்
விழி பார்வையால் என்னை வழி நடத்து
சுழி போட்டு உன் பெயரை சொல்லி மகிழ்ந்தேன் - என்
வழி மாற்றி வழி காட்டு உன் வேல் விழியால்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர
காமகோடி சங்கர காமாக்ஷி சங்கர
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர். 05.02.2013
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪
No comments:
Post a Comment