Wednesday 6 February 2013

காஞ்சியில் அருள்புரியும் மாமுனியே

(நாதர் முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே )

காஞ்சியில் அருள்புரியும்  மாமுனியே - உந்தன்
காலடி பணிந்தோம் காப்பீரே
காஞ்சி மாநகரமது  உள்ளவரையில் -உந்தன்
காமகோடி பீடம் அது அருள் சுரக்கும்

நெற்றியின் வெண்ணீரை கண்டதுமே - அது
வெற்றியை தந்திடுமே வாழ்வினிலே
பற்றிட உந்தன் பொற்பாதம் அது
பெற்றுத் தந்திடுமே நற்கதியே
அபயத் திருகரத்தினை கண்டதுமே - வாழ்வில்
ஜெயம் வந்து சேர்ந்திடுமே ஜகத் குருவே 
சகாயம் நீர் புரிந்திடுவீர் சற்குருவே - என்
அபயக் குரல் கேட்டு அருள் புரிவீர்

பழி பாவச் செயல்கள்
நான்  பல புரிந்தேன் - உன்
விழி பார்வையால் என்னை வழி நடத்து
சுழி போட்டு உன் பெயரை சொல்லி மகிழ்ந்தேன் - என்
வழி மாற்றி வழி காட்டு உன் வேல் விழியால்

ஹர ஹர சங்கர  ஜெய ஜெய சங்கர
ஜெய ஜெய சங்கர  ஹர ஹர சங்கர
காமாக்ஷி  சங்கர  காமகோடி சங்கர
காமகோடி சங்கர காமாக்ஷி சங்கர

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர். 05.02.2013

"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment