(சம்போ மகாதேவ தேவா
சிவா சம்போ மகாதேவ தேவச சம்போ
சம்போ மகாதேவ தேவா - மெட்டு )
ஷீரடி சாயியே சரணம்
என்றும் உன் துணை வேண்டியே
உன் பாதம் பணிவேன்
ஷீரடி சாயியே சரணம்
அன்புருவம் ஆனவரே சரணம்
அன்பெனும் ஆயுதம் ஏந்தி
அமர்ந்தாய் நீயே
அன்போடு தொழுவோம் உன்னை
ஆன்மீக குருவே சரணம்
ஆணவம் நீக்கி அன்போடு பழக
ஆனந்தம் பெற்றிடச் செய்வாய்
இன்முக இளவலே சரணம்
இமயம் போல் அமைதியாய்
இந்து முஸ்லிம் ஒற்றுமை வளர்த்தாய்
இடர்கள் நீக்கி சுகமே தருவாய்
ஈசனின் அம்சமே சரணம்
ஈனப் பிறவிக்கும்
ஈந்தாயே அருளை
ஈசனை தொழுவோமே உன்னை
உண்மையின் உருவமே சரணம்
உன்னதமாய் வாழ்ந்தாய்
உலகோர்க்கு உவமையாய்
உன்னை சரணடைந்தோமே சாயி
ஊக்கத்தின் உருவமே சரணம்
ஊற்று நீர் போல உள்ளத்தில்
உண்மையை வளர்ப்பாயே நீயே
ஊழ்வினை தீர்ப்பாயே சாயி
என் சற் குரு நாதா சரணம்
எங்கும் மணக்கும் பூப்போல
என் வாழ்வை மணக்கச் செய்வாய்
என்றும் மறவேனே சாயி
ஏகாந்த உருவே சரணம்
ஏற்றங்கள் தந்து மாற்றங்கள் தந்து
தேற்றிட்டாய் சாயி நீயே
ஏக்கங்கள் தீர்ப்பாய் சாயி
ஐங்கரன் ரூபமே சரணம்
ஐந்து வாரங்கள் உன்னை தொழுதாலே
நைந்து போகும் துன்பங்களே
ஐயங்கள் களைவாயே சாயி
ஒப்பிலா குருவே சரணம்
ஒரு கணம் உன்னை நினைத்தாலே போதும்
மறு கணமே காட்சி தருவாயே நீயே
ஒப்பற்ற மகானே சாயி
ஓங்கார ரூபனே சரணம்
ஓதாமல் வேதம் உணர்ந்தாய் நீயே
ஓதுவோம் உந்தன் சத்சரிதம் தனையே
ஓர்வரம் தருவாயே சாயி
ஔ வியம் எதிர்ப்பவா சரணம்
பௌர்ணமியில் வழிபட்டாலே போதும்
சௌக்கியமாய் வாழ வைப்பாயே
ஔ தத்தம் ஆனவனே சாயி
-தேனுபுரீஸ்வர தாசன்
சிவா சம்போ மகாதேவ தேவச சம்போ
சம்போ மகாதேவ தேவா - மெட்டு )
ஷீரடி சாயியே சரணம்
என்றும் உன் துணை வேண்டியே
உன் பாதம் பணிவேன்
ஷீரடி சாயியே சரணம்
அன்புருவம் ஆனவரே சரணம்
அன்பெனும் ஆயுதம் ஏந்தி
அமர்ந்தாய் நீயே
அன்போடு தொழுவோம் உன்னை
ஆன்மீக குருவே சரணம்
ஆணவம் நீக்கி அன்போடு பழக
ஆனந்தம் பெற்றிடச் செய்வாய்
இன்முக இளவலே சரணம்
இமயம் போல் அமைதியாய்
இந்து முஸ்லிம் ஒற்றுமை வளர்த்தாய்
இடர்கள் நீக்கி சுகமே தருவாய்
ஈசனின் அம்சமே சரணம்
ஈனப் பிறவிக்கும்
ஈந்தாயே அருளை
ஈசனை தொழுவோமே உன்னை
உண்மையின் உருவமே சரணம்
உன்னதமாய் வாழ்ந்தாய்
உலகோர்க்கு உவமையாய்
உன்னை சரணடைந்தோமே சாயி
ஊக்கத்தின் உருவமே சரணம்
ஊற்று நீர் போல உள்ளத்தில்
உண்மையை வளர்ப்பாயே நீயே
ஊழ்வினை தீர்ப்பாயே சாயி
என் சற் குரு நாதா சரணம்
எங்கும் மணக்கும் பூப்போல
என் வாழ்வை மணக்கச் செய்வாய்
என்றும் மறவேனே சாயி
ஏகாந்த உருவே சரணம்
ஏற்றங்கள் தந்து மாற்றங்கள் தந்து
தேற்றிட்டாய் சாயி நீயே
ஏக்கங்கள் தீர்ப்பாய் சாயி
ஐங்கரன் ரூபமே சரணம்
ஐந்து வாரங்கள் உன்னை தொழுதாலே
நைந்து போகும் துன்பங்களே
ஐயங்கள் களைவாயே சாயி
ஒப்பிலா குருவே சரணம்
ஒரு கணம் உன்னை நினைத்தாலே போதும்
மறு கணமே காட்சி தருவாயே நீயே
ஒப்பற்ற மகானே சாயி
ஓங்கார ரூபனே சரணம்
ஓதாமல் வேதம் உணர்ந்தாய் நீயே
ஓதுவோம் உந்தன் சத்சரிதம் தனையே
ஓர்வரம் தருவாயே சாயி
ஔ வியம் எதிர்ப்பவா சரணம்
பௌர்ணமியில் வழிபட்டாலே போதும்
சௌக்கியமாய் வாழ வைப்பாயே
ஔ தத்தம் ஆனவனே சாயி
-தேனுபுரீஸ்வர தாசன்
No comments:
Post a Comment