Thursday 22 November 2012

சிவசாயி கானம்

159. சிவசாயி கானம்  22.11.12 (வியாழன்)


கும்பிட கும்பிட குறைகள்  தீர்க்கும்  சாயிநாதரே
நம்பிட நம்பிட நலம் பல சேர்க்கும்  சாயிநாதரே
அம்புலி அணிந்த சிவ சொரூபன்
ஆபத்தில் காக்கும்  ஆபத்பாந்தவன்
சாயிநாதரே    சாயிநாதரே
ஓம் சாயி   ஸ்ரீ சாயி  ஜெய ஜெய   ஜெய சாயி

வேம்பின் நிழலில் குருவாய் அருளும்  சாயிநாதரே
வேம்பின் கசப்பை தேனாய் இனிக்கச் செய்யும்  சாயிநாதரே
நடம் புரிந்தருளும் நடராஜன்
சிக்கல் தீர்க்கும் சிவராஜன்
சாயிநாதரே   சாயிநாதரே
ஓம் சாயி   ஸ்ரீ சாயி   ஜெய ஜெய   ஜெய சாயி

ஷீரடி வந்த அருந்தவ சீலரே  சாயிநாதரே
போராடி வாழ்வோர் புகலிடம் நீயே  சாயிநாதரே
ஷீரடி வாசன் சிற்சபேசன்
பண்டரி புரத்து  பாண்டுரங்கன்
சாயிநாதரே   சாயிநாதரே
ஓம் சாயி   ஸ்ரீ சாயி   ஜெய ஜெய   ஜெய சாயி


துவாரக மாயியில் துயரங்கள் தீர்க்கும்  சாயிநாதரே
சாவடி வந்துன் சேவடி சேவிப்பேன் சாயிநாதரே
பொறுமையின் சிகர ராமனவன்
வறுமையை போக்கும் குபேரனவன்
சாயிநாதரே  சாயிநாதரே
ஓம் சாயி  ஸ்ரீ சாயி  ஜெய ஜெய   ஜெய சாயி



"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment