Friday 16 November 2012

அழகான முருகனுக்கு ஹர ஹரோ ஹரா 16.11.2012

அழகான முருகனுக்கு ஹர ஹரோ ஹரா
அன்பான குமரனுக்கு ஹர ஹரோ ஹரா
அருமை வடிவேலனுக்கு  ஹர ஹரோ ஹரா
அரவணைக்கும் சரவணனே  ஹர ஹரோ ஹரா

ஆனைமுகன் தம்பிக்கு  ஹர ஹரோ ஹரா
ஆறுமுக வேலனுக்கு ஹர ஹரோ ஹரா
ஆதி குரு நாதனுக்கு ஹர ஹரோ ஹரா
ஆறுபடை தலைவனுக்கு ஹர ஹரோ ஹரா

இன்முகமே காட்டுவாயே ஹர ஹரோ ஹரா
இகபர சுகம்  தருவாய் ஹர ஹரோ ஹரா
இனி என்றும் துணை நீயே  ஹர ஹரோ ஹரா
இங்கு வந்து அருள்வாயே ஹர ஹரோ ஹரா

உன்திருமுகம்  காணவே ஹர ஹரோ ஹரா
உள்ளமே மகிழ்ந்திடுமே  ஹர ஹரோ ஹரா
உன் திருப்பெயர் சொன்னாலே ஹர ஹரோ ஹரா
உணர்ச்சியது  பொங்கிடுமே ஹர ஹரோ ஹரா

ஊறுகளை  களைபவா  ஹர ஹரோ ஹரா
ஊழ்வினையை தீர்ப்பாயே ஹர ஹரோ ஹரா
ஊர் தோறும் மலை மேலே ஹர ஹரோ ஹரா
ஊக்கம் தர அமர்ந்தாயே  ஹர ஹரோ ஹரா

எங்கள் குல தெய்வமே ஹர ஹரோ ஹரா
எங்கள் துணை நீ தானே ஹர ஹரோ ஹரா
என்றும் உன்னை தொழுதிடுவோம் ஹர ஹரோ ஹரா
என்றும் எனை காப்பாயே ஹர ஹரோ ஹரா

ஏக்கங்கள் தீர்ப்பவனே ஹர ஹரோ ஹரா
ஏரகச் செல்வனே  ஹர ஹரோ ஹரா
ஏத்திடுவோம் உன் நாமம் ஹர ஹரோ ஹரா
ஏற்றங்கள் அளிப்பாயே  ஹர ஹரோ ஹரா

ஐயப்பனின் சோதரனே ஹர ஹரோ ஹரா
ஐராவதம் பெற்றாயே ஹர ஹரோ ஹரா
ஐயமின்றி உனை தொழுவோம் ஹர ஹரோ ஹரா
ஐயங்கள் களைவாயே  ஹர ஹரோ ஹரா

ஒரு தனிப் பரம்பொருளே ஹர ஹரோ ஹரா
ஒப்பில்லா தெய்வமே ஹர ஹரோ ஹரா
ஒரு தமிழ் கடவுளே ஹர ஹரோ ஹரா
ஒரு ஆணின் பிள்ளையே ஹர ஹரோ ஹரா

ஓர் ஐந்து   முகம் கொண்டாய்  ஹர ஹரோ ஹரா
ஓதிமலை  தலத்தினிலே ஹர ஹரோ ஹரா
ஓர் ஆறு அக்ஷரத்தை ஹர ஹரோ ஹரா
ஓயாமல் ஜெபிப்போமே ஹர ஹரோ ஹரா

ஔவையை  சோதித்தாய் ஹர ஹரோ ஹரா
ஔவைக்கு அருள்செய்தாய்  ஹர ஹரோ ஹரா
ஔடதம் நீ வருந்துவோர்க்கு ஹர ஹரோ ஹரா
சௌக்கியமாய்  வாழவைப்பாய்  ஹர ஹரோ ஹரா

No comments:

Post a Comment