Thursday 15 November 2012

முருகனுக்கோர் முத்தான பாடல் by தேனுபுரீஸ்வர தாசன் 15.11.2012

முருகனுக்கோர் முத்தான பாடல் by  தேனுபுரீஸ்வர தாசன்

ஹர ஹரோ ஹரா  முருகா  ஹர ஹரோ ஹரா
ஹர ஹரோ ஹரா  முருகா  ஹர ஹரோ ஹரா

சஷ்டியில் விரதமிருந்தால் ஹர ஹரோ ஹரா
இஷ்ட சித்தி அருள்வாயே ஹர ஹரோ ஹரா
சஷ்டி தோறும் வழிபடுவோம் ஹர ஹரோ ஹரா
கஷ்டங்களை போக்கிடுவாய் ஹர ஹரோ ஹரா (ஹர ஹரோ ஹரா. . .)

நெற்றி கண்ணில் உதித்தவனே ஹர ஹரோ ஹரா
சுற்றி உன்னை பணிவோமே ஹர ஹரோ ஹரா
பற்றி நின்றோம் உன் பாதமே ஹர ஹரோ ஹரா
வெற்றிகளை  தருவாயே ஹர ஹரோ ஹரா (ஹர ஹரோ ஹரா. . .)

கார்த்திகை பாலனே ஹர ஹரோ ஹரா
வார்த்தையால் உன்னை பாடி ஹர ஹரோ ஹரா
நேர்த்தியாய் வழிபட்டோம் ஹர ஹரோ ஹரா
பார்த்திடுவாய் எங்களை ஹர ஹரோ ஹரா (ஹர ஹரோ ஹரா. . .)

ஓராறு முகம் கொண்டாய் ஹர ஹரோ ஹரா
ஈராறு கரம் கொண்டாய் ஹர ஹரோ ஹரா
பேர் நூறு கொண்டவனே ஹர ஹரோ ஹரா
ஓர் ஆறுதல் தருவாயே ஹர ஹரோ ஹரா (ஹர ஹரோ ஹரா. . .)

ஆறுபடி வீடுடையாய் ஹர ஹரோ ஹரா
ஆற்றுப்படை பாடச் செய்தாய் ஹர ஹரோ ஹரா
ஆறு  தலை கொண்டவனே ஹர ஹரோ ஹரா
ஆறுதலை தருவாயே ஹர ஹரோ ஹரா (ஹர ஹரோ ஹரா. . .)

திருப்பரங்குன்றத்திலே  ஹர ஹரோ ஹரா
விருப்பங்கள் நிறைவேற்றுவாய் ஹர ஹரோ ஹரா
திருமணம் புரிந்து கொண்டாய் ஹர ஹரோ ஹரா
வருவோர் மனம் குளிர்விப்பாய் ஹர ஹரோ ஹரா (ஹர ஹரோ ஹரா. . .)

திருச்செந்தூர் கடற்கரையில் ஹர ஹரோ ஹரா
விருப்பமோடு அமர்ந்தாய் ஹர ஹரோ ஹரா
ஓர் அசுரன் சூரனையே ஹர ஹரோ ஹரா
இரு கூறாய்  ஆக்கினையே ஹர ஹரோ ஹரா (ஹர ஹரோ ஹரா. . .)

அப்பனுக்கே பாடம் சொல்ல ஹர ஹரோ ஹரா
ஸ்வாமிமலை அமர்ந்தாய் ஹர ஹரோ ஹரா
அப்பன் ஸ்வாமி  நீ தானே ஹர ஹரோ ஹரா
கூப்பிட நீ அருள்வாயே ஹர ஹரோ ஹரா (ஹர ஹரோ ஹரா. . .)

பழமான தெய்வமே ஹர ஹரோ ஹரா
பழனிமலை அமர்ந்தாயே ஹர ஹரோ ஹரா
கிழ வடிவில் வந்தவனே ஹர ஹரோ ஹரா
பழ வினைகள் தீர்த்திடுவாய் ஹர ஹரோ ஹரா (ஹர ஹரோ ஹரா. . .)

திருத்தணி மலை மீது ஹர ஹரோ ஹரா
ஒரு தனிப் பெருஞ்சுடரே ஹர ஹரோ ஹரா
வரும் துயரை போக்கிடுவாய் ஹர ஹரோ ஹரா
வருவோமே நாங்களே ஹர ஹரோ ஹரா (ஹர ஹரோ ஹரா. . .)

பழமுதிர் சோலையிலே ஹர ஹரோ ஹரா
தொழ மகிழ்வாய் நீயே ஹர ஹரோ ஹரா
வேழ முகன் சோதரனே ஹர ஹரோ ஹரா
பாழ் மனதை அடக்கிடுவாய் ஹர ஹரோ ஹரா  (ஹர ஹரோ ஹரா. . .)

அருணகிரி நாதரை ஹர ஹரோ ஹரா
அருணையிலே  ஆட்கொண்டாய்  ஹர ஹரோ ஹரா
கருணையில் காத்திட்டாய் ஹர ஹரோ ஹரா
வருணனாய்  பாட வைத்தாய் ஹர ஹரோ ஹரா  (ஹர ஹரோ ஹரா. . .)

திருப்புகழால் உன் புகழை ஹர ஹரோ ஹரா
விருப்பமோடு  பாட வைத்தாய்  ஹர ஹரோ ஹரா
ஒரு நிகரில்லா  காவியமே  ஹர ஹரோ ஹரா
ஒரு மனதுடன் பாடி மகிழ்வோம் ஹர ஹரோ ஹரா  (ஹர ஹரோ ஹரா. . .)

"Life without God
is like an unsharpened pencil
- it has no point."

Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God

- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪

No comments:

Post a Comment