Tuesday 23 October 2012

துர்கா லக்ஷ்மி சரஸ்வதி (23.10.12)

 துர்கா லக்ஷ்மி சரஸ்வதி
வாரீர் நாங்கள் வளம் பெறவே
ஓர் ஒன்பது நாட்களில் உங்களையே
பார் போற்றும் நவராத்திரி  தேவியாக (துர்கா . . . )

மலைபோல்  மனமது உறுதிபெற
மலைமகள் நீ அருள்வாய் ஜெயதுர்கா
மகிஷனை அழித்து  காத்தவளே 
எங்கள்  உள்ளம் மகிழ நீ அருள்வாய்
ஜெய துர்கா  ஸ்ரீ ஜெயதுர்கா
ஜெய துர்கா ஸ்ரீ ஜெயதுர்கா  (துர்கா . . . )

அலைபோல்  வாழ்வில்  கஷ்டங்களே
மலைத்தோம் நங்கள் மகாலக்ஷ்மியே
அலைமகள் உந்தன் பார்வைபட்டால்
அலைபாயும் வாழ்க்கை சீராகுமே
அஷ்டலக்ஷ்மியே அருள்வாய் நீ
கஷ்டங்கள் தீர்த்து காப்பாய் நீ    (துர்கா . . . )

கலை மகள் உந்தன் அருள் இருந்தால்
கவலை இன்றி உயர்வோமே
கல்விக்கு அதிபதி கலை வாணி
கல்வி செல்வம் தர வா நீ
கலை வாணி எங்கள் கலை வாணி
எங்கள் கவலைகள் தீர்ப்பாய் இனி நீ  (துர்கா . . . )

No comments:

Post a Comment