Monday 22 October 2012

ராகவேந்திரா ஞானகேந்திரா



 

ராகவேந்திரா ஞானகேந்திரா
பிரகலாத வரதா சங்குகர்ண அவதாரா . . .
ராகவேந்திரா ஞானகேந்திரா

துங்கா நதி தீர மங்கா புகழ் யதியே
எங்கும் உன் மிருத்திகை தரும் நவ நிதியே
பொங்கும் மனம்  மகிழ்ந்தே அடைய உன் திரு பதியே
பொங்கும்  இன்பம் தரமே உந்தன் முக மதியே

ராகவேந்திரா ஞானகேந்திரா
பிரகலாத வரதா சங்குகர்ண அவதாரா . . .
ராகவேந்திரா ஞானகேந்திரா

தாங்கும் செல்வம் தருவாய் எங்கள் குல குருவே
மங்கும் இருள் வாழ்வில் துணை நீயே குருவே
எங்கும் உந்தன் அருளே உணர்ந்தோமே குருவே
எங்கும் துணை வருமே உந்தன் உருவே குருவே

ராகவேந்திரா ஞானகேந்திரா
பிரகலாத வரதா சங்குகர்ண அவதாரா . . .
ராகவேந்திரா ஞானகேந்திரா

குருவார விரதத்தால் உனதருள் கிட்டிடுமே
குருவார தரிசனத்தால் மனம் அது மகிழ்ந்துடுமே
குருவாரம் வரும் வரையில் உன் நினைவு வாட்டிடுமே
குருவே உன்னை சரணடைந்தால் சகலமும் கிட்டிடுமே

ராகவேந்திரா ஞானகேந்திரா
பிரகலாத வரதா சங்குகர்ண அவதாரா . . .
ராகவேந்திரா ஞானகேந்திரா



- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
 
13-09-2012

No comments:

Post a Comment